உயிரே உன் நினைவால் துடிக்கிறேன்

நீ ஒருமுறை
கண் சிமிட்டினால்
ஓராயிரம் கவிதை
எழுதும் நான் - ஒரு
நொடி பேசாது இருந்தால்
ஆயிரம் முறை இறந்து
பிறக்கிறேன் ....!!!
உயிரே மௌனத்தால்
கொல்லாதே ...!!!

உயிரே உன் நினைவால்
துடிக்கிறேன்
***********************
உன் வீட்டு
முககண்ணாடியாய்
இருந்திருக்க வேண்டும்
உன் அத்தனை அழகையும்
ரசிக்கும் பாக்கியத்தை
பெற்றிருப்பேன் ...!!!
உன் உதடு பூசும்
மையாக இருந்திருந்தால்
ஒயாத முத்தம்
தந்திருப்பேன் .....!!!

உயிரே உன் நினைவால்
துடிக்கிறேன்
***********************
காற்றுக்கு
வாசனை இல்லை
ஆனால் நீ வரும் போது
உணர்கிறேன் காற்றில்
வாசனையை ....!!!
நீருக்கு நிறம் இல்லை
நீ நீராடும் போது
பார்கிறேன் அதன்
நிறத்தை .....!!!

உயிரே உன் நினைவால்
துடிக்கிறேன்
************************
என்
பஞ்ச வர்ணகிளியே
நீ தினமும் அணியும்
ஆடைகள் உன்னை
அப்படி அழைக்க
தூண்டுதடி ...!!!
பச்சை கிளிக்கு
முன்னால் வந்து விடாதே
உன் கொவ்வை இதழை
கொத்திவிட்டு சென்று
விடும் .....!!!

உயிரே உன் நினைவால்
துடிக்கிறேன்
**********************
என்னை பொறுத்த
மட்டில் நீ ஒருகாதல்
முத்து ....!!!
ஒருதுளி மழைநீர்தான்
சிப்பிக்குள் முத்தாகிறது
உன் சின்ன சிரிப்புதான்
என் இதயத்தில்
காதல் முத்தானாய் ...!!!

உயிரே உன் நினைவால்
துடிக்கிறேன்
**********************
நீ பேசு தயவு செய்து பேசு
நீ பேசாமல் இருக்கும் நொடி
நான் இறந்து கொண்டிருக்கிறேன்
நீ பேசினால் நிற்கப்போகும்
மூச்சு துடிக்கும் - உயிரே
மறவர்களுக்கு காதல்
நமக்கு மூச்சு தான் காதல்
மறந்துவிடாதே ....!!!

உயிரே உன் நினைவால்
துடிக்கிறேன்
**********************

கண்ணால் செய்யும் காதலை
காட்டிலும்
எண்ணத்தால் செய்யும்
காதல் அழகு ...!!!
அருகில் இருக்கும் காதலை
காட்டிலும்
தொலைவில் இருக்கும்
காதல் அழகு ...!!!
பேசிகொண்டு இருக்கும்
காதலை காட்டிலும்
மௌனத்தால் செய்யும்
காதல் அழகோ அழகு .....!!!

உயிரே உன் நினைவால்
துடிக்கிறேன்
**********************

நீ வேண்டுமென்று
மௌனமாக இருக்கிறாயா ..?
அல்லது மௌனம் தான்
உன் மொழியா ...?
எப்படியோ இருந்துவிட்டுபோ
எனக்கும் மௌன மொழியை
கற்று தா ....!!!
உன் நினைவுகள் வரும்போது
மௌனமாக இருக்க
முயற்சிக்கிறேன் .....!!!

உயிரே உன் நினைவால்
துடிக்கிறேன்
**********************

என் இதயத்தை வந்து
கிழித்து பார் .....!!!
அது ஓலம் விட்டு
உன் பெயரை
சொல்லி அழுவதை.....!!!
எனக்காக நீ வராவிட்டாலும்
பாவம் உன்னையே நினைத்து
அழும் என் இதயத்துக்காக
ஒரு முறை பேசிவிடு ....!!!

உயிரே உன் நினைவால்
துடிக்கிறேன்
**********************

என்
இதயம் இரத்தத்தை..
சுற்றி கரிப்பதை...
நிறுத்திவிட்டு...
உன் நினைவுகளை....
சுற்றி கரிக்கிறது .....!!!
இறந்து கொண்டிருப்பது
நான் என்பதை கூட
பொருட்படுத்தாமல்
உன் நினைவை
காதலிக்கிறது ......!!!

உயிரே உன் நினைவால்
துடிக்கிறேன்
**********************

நீ
திரும்பி வரமாட்டாய்
என்று தெரியும் என்
இதயத்துக்கு ....!!!
சொல்லு கேட்குதில்லை
என் கண் ....!!!
நீ வருவாய் என்று தூர
பார்வையை பார்த்தபடி
கண்னை கெடுக்கிறது ....!!!
தூரத்தில் தெரியும் உருவம்
எல்லாம் நீ என்று ஏமாந்து
துடிக்குது என் கண் .....!!!

உயிரே உன் நினைவால்
துடிக்கிறேன்
**********************

உனக்கும் எனக்கும்
காதல் என்று ஊர்
பேசுகிறது உண்மையா ..?
எனக்கு கேட்க ஆசையாய்
இருக்கிறது ....!!!
ஆனால் மன்னித்துவிடு
உன்னை காதலிக்கும்
இளமை என்னிடம் இல்லை
என் முதுமையை ஏற்கும்
மன தைரியம் உனக்கு
இல்லை ....!!!

உயிரே உன் நினைவால்
துடிக்கிறேன்
**********************

குருவி கூட்டுக்குள் இருக்கும் ...
குஞ்சு குருவி தாயின் இரையை ...
எதிர்பார்த்து காத்திருப்பது போல் ...
என் காதல் இரையை உன்னிடம் ...
இருந்து எதிர்பார்கிறேன் ...!!!
உன் நினைவுகள் தான் என்
இதய வீடு வாசல் படி ....!!!

உயிரே உன் நினைவால்
துடிக்கிறேன்
**********************

சிவன் பாதி சக்தி பாதி ...
படத்தை ரசிக்கிறேன் ....
இறைவன் கூட சக்தியை ....
பாதியாக வைத்திருக்கிறார்....
நீயோ என்னுள் முழுமையாக ...
வியாபித்திருகிறாய் ....!!!
நம்மை படமாக வரைந்தால் ..?
உன்னை
வரைந்தால் நான் வருவேன்
என்னை
வரைந்தால் நீ வருவாய் ...!!!

உயிரே உன் நினைவால்
துடிக்கிறேன்
**********************
உனக்கும் சேர்த்து காதல்
பாவ மன்னிப்பு கேட்கிறேன்
என்னை நீ காதலித்து விடு ...!!!
தேனீ கூடு கட்டுவதுபோல்
உன் சின்ன சின்ன நினைவையும்
சின்ன சின்ன அசைவையும்
சேர்த்து காதல் கூடு கட்டுகிறேன்
கலைத்து விடாதே ....!!!

உயிரே உன் நினைவால்
துடிக்கிறேன்
**********************

அவரச சிகிச்சையில் இருக்கும்
நோயாளியைப்போல் நானும்
உன் நினைவால் துடிக்கிறேன்
விஷத்தை குடித்திருந்தால்
கூட இத்தனை வலியில்லை
உன் விசயத்தில் தலையிட்டேன்
துடிக்கிறேன் ....!!!

உயிரே உன் நினைவால்
துடிக்கிறேன்
**********************

உன் நினைவுகள் ஒரு
பக்கம் மறுபுறம் நீ கையில்
கட்டி விட்ட மணிக்கூடு
இரண்டும் நிற்காமல் சுற்றுகிறது
நீயோ மணிமுள் போல்
காதலை மெதுவாக அசைகிறாய்
நான் வினாடி முள்போல்
துடிக்கிறேன் ....!!!

உயிரே உன் நினைவால்
துடிக்கிறேன்
**********************

கருத்துகள்

பிரபலம் பெற்ற கவிதை

ஹைக்கூ , சென்ரியு , லிமரைக்கூ வடிவம்

தேர் திருவிழா

உயிர் மூன்றெழுத்து கவிதை மூன்று வரி