இடுகைகள்

ஏப்ரல் 13, 2017 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

அதிசயக்குழந்தை 15

அதிசயக்குழந்தை - அன்பு ------------------- அளவுக்கு மிஞ்சினால்..... அமிர்தமும் நஞ்சு......... அன்புக்கும் பொருந்தும்.....! என்னடா உளருகிறாய்.....? என்று கேட்டேன் அவனிடம்.... ஆசான் எனும் தோறணையில்...... ஆமாம் ஆசானே எதுவும்..... அளவோடு இருக்கனும்..... இல்லையேல் அதுவே நஞ்சு.........! பணத்தின் மீது அதிக அன்பு...... உடலை கெடுக்கும் உளத்தை...... மாசுபடுத்தும் அது நஞ்சுதானே........ பிள்ளைகள் மீது அதிக பாசம்..... எதிர்பார்பை கூட்டும்...... நிறைவேறாதபோது குடும்ப..... சண்டையாக மாறுகிறது........! துணைமீது அதிக காதல்...... கோழையாக்கிவிடுகிறது...... சுயசிந்தனையை இழக்க வைக்கிறது...... தன்மானத்தை இழக்கவைக்கிறது....... தனிமையாகினால் முதுமையை..... துயரமடைய வைக்கிறது.................! சமூக அக்கறை அதிகமானால்........ அதிக பதவி ஆசை வருகிறது...... பதவி வரும் போது எல்லவற்றையும்.... கண் மறைக்கிறது........! அப்போ எதையும் விரும்ப கூடாது என்கிறாயா.......? இல்லை இல்லை ஆசானே....... எல்லவற்றையும் விரும்புங்கள்..... எல்லாம் உங்களால் தான் ...... நடைபெறுகிறது என்பதை மட்டும்.... மறந்துவிடுங்கள்.........! ^^^^^^^^^ அதி

அதிசயக்குழந்தை 14

அதிசயக்குழந்தை - அநாதை  ----- அதிசயக்குழந்தையிடம் .... உன் அப்பா பெயர் என்ன ...? உன் அம்மா பெயர் என்ன ...? உனக்கு உடன் பிறப்புக்கள் ... எத்தனை பேர் .....? எனக்கு யாருமே இல்லையே ... என்றான் ....!!! அப்போ நீ அநாதையா...? என்று கேட்டேன்.... யாருமே இல்லை என்றுதானே ... சொன்னேன் அநாதை ... என்று சொன்னேனா என்றான் ...!!! என்ன உளறுகிறாய் ....? சொல்ல தொடங்கினான் அவன்  கருத்தை .....................!!!!!!!!!!!! உங்கள் .... அம்மா அப்பா இப்போ .... இருகிறார்களா ....? இல்லையே ....!!! அப்போ நீங்கள் ... அநாதையா ....?  இல்லையே ....!!! உங்கள் பெற்றோர் இறந்தவுடன் ... உங்களுக்கென ஒரு குடும்பத்தை ... அமைத்து மனைவி குழந்தை.... மாமனார் மாமியார் என்று ஒரு ... உறவை வளர்த்தீர்களே...... உங்களை யாரும் அநாதை .. என்று அழைத்தார்களா ....? உங்களின் தவறு என்ன தெரியுமா ...? நீங்கள் பிறரை காப்பாற்றுவதாக .... நினைப்பதும் நீங்கள் இல்லையென்றால் ... அவர்கள் அனாதையாகிவிடுவர் .... என்ற உங்கள் தப்பான எண்ணமே ....!!! நான்  ஒரு அநாதை எனக்கு உதவுங்கள் .... என்று சொல்பவர்கள் அநாதை ... என்ற சொல்லை தம் ஆயுதமாய் .... எடுத்து தம்மீது எல்லோ

அதிசயக்குழந்தை 13

அதிசயக்குழந்தை - இறக்கம்  ------- அதிசயக்குழந்தை ..... ஏணியில் ஏறுவதும் .... இறங்குவதுமாய் விளையாடிக் ... கொண்டிருந்தான் ....!!! அந்தவழியால் வந்த நான் .... என்னடா செய்கிறாய் என்று .... கேட்டேன் .....!!! ஏறுவதும் இறங்குவதுமாய் .... இருக்கிறேன் தெரியவில்லையா ...? என்றான் ....? உனக்கு  ஏற்றம் பிடிக்குமா .....? இறக்கம் பிடிக்குமா ....? எனக்கு இறக்கம் தான் ... பிடிக்கும் ஆசானே .... ஏன்டா உனக்கு எப்போதும் .... எதிர் மறையாகதான் பிடிக்குமா ...? இல்லை  ஆசானே எதிர் மறையின் ... நன்மையை உணரமாட்டேன் .. என்கிறீர்களே ....!!! இறக்கமும் வீழ்ச்சியும் .... தோல்விகள் இல்லை .... வரலாற்றின் மறு பக்கங்கள் .....!!! மலை  ஏறுபவன் இறங்கினால்-தான் மலை ஏறியதின் சாதனை ... தெரியவரும் .....! பள்ளத்திலிருந்து நீர் வீழ்ந்தால்-தான் நீரின் மகிமை புரியும் ....! அப்பில் பழம் கீழே விழுந்ததால் ... நியூட்டன் புவியீர்ப்பை கண்டார் .... வானத்து நீர் கீழே விழுந்தால் தான் .... பூமி பசுமை அடைகிறது ....! இயக்கவிதி மேலே தொழிற்பட்டால் .... வெளிப்பாடு கீழேதான் இருக்கும் .....!!! இறக்கமும் வீழ்ச்சியும் ..... இழிவானவையல்ல எல்லா .... செய

அதிசயக்குழந்தை 12

அதிசயக்குழந்தை - ஆசை  ---------- உன்  ஆசை என்ன என்று கேட்டேன் ... அதிசயக்குழந்தையிடம்.....? ஆசையில்லாமல் இருக்கவே ... ஆசை என்றான் ஒரே வரியில் ....!!! என்னப்பா சொல்கிறாய் ....? ஆமா ஆசானே .....!!! ஆசையே அனைத்து துன்பத்துக்கும் .... மூல காரணி ......!!! நிறைவேறாத ஆசையின் வெளிப்பாடே .... கோபம் ,,,,,,,,,,,,!!! கோபத்தின் வெளிப்பாடே .... கொடூரம் ...........!!! கோபத்தை குறையுங்கள் ..... என்பது தவறு - ஆசையை .... குறையுங்கள் என்பதே சரியானது .....!!! பெண் ஆசை .... நடத்தையை கெடுக்கும் ...... மண் ஆசை ..... நாட்டை கெடுக்கும் ...... பொன் ஆசை ...... பெண்ணையே கெடுக்கும் .......!!! ஆசையை குறைப்பது எளிதல்ல .... ஆசையை வரிசைப்படுத்துங்கள் .... அந்த வரிசையில் இயலுமையை .... பாருங்கள் நிறைவேறக்கூடிய .... அவசியமான ஆசைக்கு ஆசைப்படுங்கள் .....!!! ^ அதிசயக்குழந்தை  வசனக்கவிதை  கவிப்புயல் இனியவன் தொடர் - 12

அதிசயக்குழந்தை 11

அதிசயக்குழந்தை - முதுமை  ---------- பக்கத்து வீட்டில் தாத்தா .... பேரனை திட்டியபடி இருந்தார் .... தனது அனுபவத்தையெல்லாம் .... அறிவுரையாக கொட்டி கொண்டிருந்தார் ..... பேரனோ காதில் விழுத்தாமல் .... எங்கேயோ பார்த்துகொண்டிருந்தான் ... கோபமடைந்த தாத்தா அடிக்க கை .... ஓங்கினார்.................................................  அப்போது அதிசய குழந்தை ....!!! தாத்தா  நிறுத்துங்க... நிறுத்துங்க .... உங்களுக்கு அறிவுரை செய்ய ... நான் பெரும் அறிவானவன் இல்லை ... என்றாலும் கூறதொடங்கினான்.....!!! முதுமையில் எல்லோரும் -தம் .... அனுபவத்தை அறிவாக நினைத்து .... அறிவுரை சொல்கிறார்கள் -தப்பு ... அனுபவம் வேறு அறிவு வேறு .....! உங்களது அனுபவம் மற்றவனுக்கு .... தேவைப்படாது ,பொருத்தமற்றது .... முதுமையில் அதை நீங்கள் பிறர் .... மீது திணிக்கிறீர்கள் தப்பு தாத்தா ...!!! வயது கூடியவர்கள் அறிவாளிகள் .... வயது குறைந்தவர்கள் அறிவற்றவர்கள் .... நாங்களே அனுபவசாலிகள் ... உங்களுக்கு அனுபவம் போதாது .... என்றெல்லாம் முதியோர் நினைப்பது .... தப்பு தாத்தா தப்பு .....!!! முதுமையின் ஒத்தகருத்து பொறுமை ..... தேவையற்றவற்றில் தலைய

அதிசயக்குழந்தை 10

அதிசயக்குழந்தை -வறுமை  ******* வீதியில்  நின்ற வறிய வயோதிபர்.... வீதியில் வந்த பணக்காரனை ....  உதவி கேட்டார் - அவர் பணம் .... கொடுக்கவில்லை - கோபமடைந்த ... வயோதிபர் வாய்க்கு வந்தபடி .... திட்டினார் ....!!! இதை  அவதானித்த அதிசய குழந்தை ..... வயோதிபரிடம் என்ன தாத்தா ... என்று ஆரம்பித்ததும் .... அவர் மேலும் திட்டினார் .........!!! பணம்  படைத்தவர்கள் தீயவர்கள் ..... கயவர்கள் கள்வர் இரக்கம்... அற்றவர்கள் நயவஞ்சகர்கள் .... திட்டிக்கொண்டே போனார் .... நிலை குலைந்த தாத்தாவுடன் .... பேசி பயனில்லை என்றறிந்த .... அதிசயக்குழந்தை விலகியது .....!!! என்ன குழந்தாய் அதிகம் ... ஜோசிக்கிறாய் என்று கேட்டேன்....? ஆசானே ..... வறுமை என்பது ஒரு நோய் ..... நோய்க்கு நாம் மருந்தெடுத்து .... மாற்றுகிறோமோ அதுபோல் ... வறுமையையும் நாம் மாற்றலாம் .... வறுமையோடு வாழ்பவன் நோயோடு .... இறந்து விடக்கூடாது என்கிறேன் ....!!! வறுமைக்கு காரணம் பணம் .... படைத்தவர்கள் மோசமானவர்கள் ... என்ற மன விரக்தியும் தாமும் .... பணம் படித்தால் அவ்வாறே மாறி .... விடுவோம் என்ற மனப்பயமுமே .... ஒருவன் மீது வறுமை தொடரகாரணம் .... வறுமையை நீக்கணும

அதிசயக்குழந்தை 09

அதிசயக்குழந்தை - எண்ணம் ------------ எண்ணும் எழுத்தும் .... கண்ணெனத்தகும் ....!!! அதிசய குழந்தை  வாய்க்குள் உச்சரித்து ... கொண்டிருந்தான் ...!!! என்னடா  புது பழமொழியோ ...? இல்லை ஆசானே .... எதுவுமே புதியது இல்லை .... எல்லாமே முன்னோர் சொன்ன .... பொதுமை மொழிகள் .... அதிலிருந்தே இனிமேல் ... எல்லோரும் எடுக்க வேண்டும் .... இது எனது இது நான் சொன்னது .... என்று யாரும் உரிமை .... கொண்டாடுவதில் பயனில்லை ...!!! எண்ணமே ஒருவனின் உருவம் .... எண்ணமே ஒருவனின் வாழ்க்கை.... எண்ணமே ஒருவனின்முடிவும் .... அடுத்து சொன்னான் குழந்தை ...... சொர்க்கமும் நகரமும் .... ஒருவனுடைய எண்ணமே ..... துயில் எழும்பும் போது .... நல்ல சிந்தனையுடன் எழுபவன் .... அன்று முழுதும் சொர்க்கத்தில் .... வாழ்கிறான் ......!!! நேற்றைய பகையை ... முன்னைய இழப்பை .... பொறாமையை துயில் .... எழும்போது நினைப்பவன் அன்று முழுதும் நரகத்தில் .... வாழ்கிறான் ......!!! குப்பத்தில் இருப்பவனை ... கோபுரத்துக்கும் ,கோபுரத்தில் ... இருப்பவனை குப்பத்துக்கும் .... மாற்றுவது தலையெழுத்தல்ல .... அவரவர் எண்ணமே எண்ணமே....!!! ^ அதிசயக்குழந்தை  வசனக்கவிதை  கவிப்புய