இடுகைகள்

2016 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

என் ஊரை காணவில்லை...?

படம்
நான்கு திசையும் வயல்கள் நாலாபுற‌மும் குளங்கள் ஊர் மத்தியில் அம்மன் ஆலயம் எல்லை புறத்தில் வீர‌ பத்திரர் பைரவர் அய்யனார் ஊரை காக்கும் கடவுள்களாய்.....!!! சிறு படகுடன் நிறைந்த‌ கடற்கரை தொலைதூரத்தில் உடைந்த‌ கட்டுமரங்களும் ஆங்காங்கே சிதறிகிடக்கும் வரையறுக்கப்பட்ட‌ குடிசைகள் கிராமிய‌ பண்பாட்டை மாற்றாத‌ வாழ்க்கை முறை....!!! மாலை நேரத்தில் ஆலமரத்தடி அறிவு தாத்தாக்களின் மன்றம் மழைக்கு கூட‌ பாடசாலை பக்கம் ஒதுங்காதவர்கள் புராணக்கதையிலும் உலக‌ நடப்பிலும் படிக்காதமேதைகள்.......!!! பச்சை மரமொன்றில் பழங்கள் எதுமில்லை கறுப்பாய் ஒரு கனி அதன் பெயர் தேன் கூடு அதற்கு ஒரு கல்லால் எறிந்து தேனிகலைக்கும்போது தலை தெரிக்க‌ ஓடும் சிறார்கள்....!!! இத்தனையும் அனுபவித்து சுவைத்த‌ அற்புத‌ மனிதன் நான் காலம் கடந்து என் பிள்ளையுடன் என் ஊருக்கு போனேன் கனவுகளுடன் அம்மன் கோயில் இராஜ‌ கோபுரத்தை காணவில்லை ‍சிறு கூடாரத்துக்குள் முடங்கி இருந்தால் என் தாய் காவல் தெய்வங்கள் இருந்த‌ கால‌ சுவடியை கூட‌ காணவில்லை ......!!! என் கனவு மட்டும் தவுடு பொடியாகவில்லை என் ஊரும் தவுடு பொடியாகிவிட்டது ஆலமரம் கூட‌ அங்கவீனமாய் கி

உயிர் மூன்றெழுத்து கவிதை மூன்று வரி

படம்
உயிர் மூன்றெழுத்து கவிதை மூன்று வரி ************************* என் இதயத்தில் குடியிருப்பவளே மெதுவாக மூச்சு விடுகிறேன் -என் மூச்சுகாற்று சுட்டுவிடகூடாது ------------------------------- கல்லை செதுக்கினேன் உன் உருவம் கண்ணால் செதுக்கினேன் நம் காதல் இதயம் சலவை கல்லாய் அடிவாங்குகிறது ...!!! ------------------------------- காதலித்து பார் உள்ளம் சுத்தமாகும் கவிதை எழுது உலகம் சுத்தமாகும் இரண்டையும் செய்பவன் ஞானி ------------------------------- உலக போதையிலேயே கொடூரம் உன் போதை கண் தான் -இன்னும் போதையில் இருந்து மீளவில்லை ------------------------------- நெற்றி கண் திறந்தபோது நக்கீரன் எரிந்தார் நீ கண் திறந்த போது நான் எரிந்தேன் முதலாவதில் மீட்சி இருந்தது உன்னில் ...? ------------------------------ நீ வேறு நான் வேறு இல்லை வாழ்க்கை வேறு காதல் வேறுமில்லை உன் நினைவு வேறு உணர்வு வேறுமில்லை --------------------------------------- நான் ஒருதலை காதலாக இருந்திருந்தால் வலியை உனக்கு தந்திருக்க மாட்டேன் இருதலையாக உனக்கும் வலியை தருகிறேன் ------------------------------- உன்னை