காதலின் படிமுறை -நீ எந்த நிலை

காதல் அரும்பு
               ************************
கூட்டத்தில் நெரிந்து
 கொண்டு கூத்தாடி  போல்நின்றேன் -நீ 
பார்த்த பார்வையில் உறைந்து போனேன்  -
அந்த கணமே
அரும்பியது காதல் மொட்டு உன் மீது ஊமை காதல் .
                காதல் ஏக்கம்
              ************************
மீண்டும் எப்போது சிந்திப்போம் ..மீண்டும் ..?
நேற்று நடந்தது விபத்தா ?விளையாட்டா ?
தினம் தினம் ஏங்கி ஏங்கி நாட்கள் கூட வருடம் போல் நகர்ந்தது ............!
                காதல் மலர்வு
               **************************
காதல் என்பது இறைவன் இணைப்பு ..!
விதியும் மதியும் இணைவதால் ஏற்படும் பிணைப்பு
மீண்டும் ஒரு முறை வந்தது அந்த வசந்தம்
இம் முறை விளையாட்டு அல்ல உறுதி ...!

                காதல் வாழ்க்கை
               ****************************
தினம் தோறும் தனியே உணவு அருந்தியதில்லை
தினம் தோறும் தனியே உறங்கியதில்லை
தினம் தோறும் தனியே வெளியே செல்லவில்லை
இதல்லாம் நடக்கிறது என் கற்பனையில் .........!
                 காதல் வலி
               **********************
சந்திக்கும் நேரம் சறுக்கினால் சண்டை இடுவாய்
சற்று நேரம் ஊமையாகி என்னை உறயவைப்பாய்
முள் வினாடி கம்பி முள்போல் குத்தியோடும்
உனக்கும் விளங்கும் காதல் வலிக்குதான் என்று
               காதல் ஊடல்
              ***********************
வலி அதிகரித்தால் தான் ஊடல் அதிகரிக்கும்
வலிக்கும் ஊடலுக்கும் \"நேர்கணிய தொடர்பு \"
ஊடலின் உச்சம் நீ தந்த முத்தம்
குளிக்கக்கூட வில்லை முத்தம் கரையும் எண்டு
               காதல் தோல்வி
               ************************
குறுக்கிட்டது நமக்கிடையில் மூன்றாவது தலை
நம் தலையை தனித்தனியாய் பிரித்துவிட்டது
குற்றுயிரும் குறைஉயிருமாய் பலநாள்இருந்தோம்
என்னவென்றாலும் செய்து தொலை என்றது மூன்றாம் தலை ......!
              காதல் வெற்றி
             ***********************
காதலின் வெற்றி காதல் திருமணம் ..!
வாழ்நாள் முழுவதும் -உன் சுவாசத்தில் 
என் இதயம் இயங்குயது தான் ...!காதல் வெற்றி ...
          காதல் கைமாற்றம்
         ******************************
காதலில் வெற்றிகண்ட காதலர் நாம்  
நம் குழந்தை காதலித்தால் எப்படி ? தடுப்பது ?
அப்படி தடுத்தால் காதல் எப்படி ? வளர்வது ?
நம் குழந்தையும் காதல் திருமணம் தான்
         காதல் மரணம்
        ************************
உள்ளத்தால் வரும்காதல் மரணம் வரை இருக்கும்
இந்த உண்மை நமக்கும் பொருந்தும்
தொல்லையில்லாமல் சோடியில்ஒன்று மடிந்தது
பூ விழுந்தால் காம்பு மிஞ்சுமா ? அதுவும் விழுந்தது
            

கருத்துகள்

பிரபலம் பெற்ற கவிதை

ஹைக்கூ , சென்ரியு , லிமரைக்கூ வடிவம்

தேர் திருவிழா

உயிர் மூன்றெழுத்து கவிதை மூன்று வரி