இடுகைகள்

2017 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

பல்சுவைக்கவிதைகள் 1000 கஸல்

இனியவன் கஸல் கவிதைகள் --------------------------------------------- பல்சுவைக்கவிதைகள் --------------------------------------------- நீ சொன்ன ஒரு வார்த்தை.... ஆயிரம் கஸல் கவிதையை ... தோற்றிவிட்டது ....!!! சுதந்திர பறவைகளை ... திறந்த சிறைச்சாலைக்குள் .... அடைத்துவிடும் .... காதல் ......!!! இதயங்களை .... இணைக்கும் .... சங்கிலி -காதல் ... துருப்பிடிக்காமல் .... பார்த்துக்கொள் .....!!! முள் மேல் பூ அழகானது ..... என் இதயத்தில் பூத்த .... முள் பூ நீ ................!!!! நீ காதலோடு...... விளையாட வில்லை .... என் மரணத்தோடு ..... விளையாடுகிறாய் ......!!! ^ கவிப்புயல் இனியவன் இது எனது 1000 கஸல் 

பல்சுவைக்கவிதைகள்

வலிக்கும் இதயத்தின் கவிதை --------------------------------------------- பல்சுவைக்கவிதைகள் --------------------------------------------- என் ........ காதலின் வலிமை ...... உனக்கு புரியவில்லை ..... என்றோ என் காதலை ..... நினைத்து பார்ப்பாய் ...... அப்போது புரியும் என்னை ..... இழந்ததால் வலி ...........!!! உன்னை காணும் .... போது வேண்டுமென்றே..... இதயத்தை கல் ஆக்கி விடுகிறேன் ..... உள்ளே இதயம் நொறுங்கும் .... சத்தம் யாருக்கு புரியும் .....? ^^^^^ கவிப்புயல் இனியவன் வலிக்கும் இதயத்தின் கவிதை பல்சுவைக்கவிதைகள் ^^^^^ 200 கவிதைக்கு மேல் இந்த தலைப்பில் கவிதை உள்ளது

ஒரு காதல் ஒரு ஓசை........!

ஒரு காதல் ஒரு ஓசை........! --------------------------- இதயத்தில் இதமாய் வந்- தாய் காதலை சுகமாய் தந்- தாய் நினைவில் இன்பமாய் இருந்- தாய் சொல்லடி என்ன செய்- தாய்............? உன்னில் என்னை மறந் -தேன் உயிராய் உன்னை நினைத் -தேன் உறவுகளோடு உன்னிடம் வந் -தேன் உன் சம்மதத்தால் மெய்மறந் -தேன் ^^^^^^^^^^^^^^^^^^ கவிப்புயல் இனியவன் மணிபல்லவம் -வட இலங்கை பல்சுவைக்கவிதைகள் ^^^^^^^^^^^^^^^^^^

கவிப்புயல் இனியவன் பல்சுவைக்கவிதைகள்

---------------------------------- திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் ---------------------------------- சின்ன சண்டையிட்டு ..... சின்ன கோபத்துடன் .... சின்னனாய் விலகியிருப்பது ... ஊடல் எனப்படும் ....!!! ஊடலின் அதிக இன்னமே .... கூடலின் அதிக இன்பமாகும் .... கூடலின் ஒரு செயலே .... ஊடல் ஆகும் ......!!! + குறள் 1330 + ஊடலுவகை + ஊடுதல் காமத்திற்கு இன்பம் அதற்கின்பம் கூடி முயங்கப் பெறின் + திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் + கவிதை எண் - 250 ^^^^^^^^^^^^^^^^^^ கவிப்புயல் இனியவன் மணிபல்லவம் -வட இலங்கை பல்சுவைக்கவிதைகள் ^^^^^^^^^^^^^^^^^^ திருக்குறளை கவிதையாக அமைக்கும் எனது சின்ன முயற்சியில் தற்போது "இன்பத்துப்பால் " என்னும் பகுதியில் 250 குறள்கள் அமைந்துள்ளன . அவற்றை ஒவ்வொன்றாக கவிதையாக்கி அதற்கு பொருத்தமான தலைப்பிட்டு கவிதை வடிவத்தில் அமைத்துள்ளேன்

கவிப்புயலின் பலரசக்கவிதைகள்

கவிப்புயலின் பலரசக்கவிதைகள் --------------- தகவளுடன் காதல்கவிதை --------------- கண்ணே ... ஜேர்மனியின் பெர்லின் சுவர் ... இடிக்கப்படு பலவருடமாகிறது ... இரு வேறுபட்ட பொருளாதார ... முறைமைகள் கூட ஒன்றாயின ...! கண்ணே நீ ... எனக்கு விதிக்கும் காதல் .. சுவர் ஏனடி நீண்டுகொண்டே ... செல்லுகிறது .... காதலுக்கு கண்டிப்பு தேவை.... துண்டிப்பாக இருக்கக்கூடாத்தடி ...! ^^^ கவிப்புயல் இனியவன் தகவளுடன் காதல்கவிதை 

கவிப்புயலின் பலரசக்கவிதைகள் 04

கவிப்புயலின் பலரசக்கவிதைகள் --------------- ஒருதலைக்காதல் கவிதை --------------- உன்னை நினைத்துக் கொண்டிருக்க ....... இனிப்பாய் இருக்கிறது...... நீயும் என்னை........... நினைத்துக்கொண்டிருப்பாய் என நினைத்துக்கொள்வது..... ஒருதலைக்காதல் .......! கோலங்களை...... மனசுக்குள் போடுகிறேன்...... பூவை தலையில் சூட ... ஏங்கிக்கொண்டு .... இருக்கிறேன் .......... காதலிலே கொடூரமானது ... ஒருதலை காதல் தான் ...! ^^^ கவிப்புயல் இனியவன் ஒருதலைக்காதல் கவிதை 

கவிப்புயலின் பலரசக்கவிதைகள் 03

கவிப்புயலின் பலரசக்கவிதைகள் --------------- தன்னம்பிக்கை கவிதை --------------- தனக்கிருக்கும்..... உறுதியான சக்தி ...... தன்னம்பிக்கை..............! தன்மானம் காத்திட ..... தலைசாயாத சக்தி .... தன்னம்பிக்கை.............! எல்லாமே இழந்தாலும் .... எஞ்சியிருக்கும் சக்தி .... தன்னம்பிக்கை...............! உயிரே போனாலும் ............. உயிர்த்தெழும் சக்தி ........... தன்னம்பிக்கை...........! இரக்க பார்வையை ...... இல்லாதொழிக்கும் சக்தி ..... தன்னம்பிக்கை............! எல்லாம் சாத்தியமே என்று ...... அறிவை நம்பும் சக்தி ........ தன்னம்பிக்கை.............! ^^^ கவிப்புயல் இனியவன் தன்னம்பிக்கை கவிதை 

பொருளாதாரக்கவிதை

கவிப்புயலின் பலரசக்கவிதைகள் --------------- பொருளாதாரக்கவிதை --------------- ஏழையின் வீட்டில் ... பசி வயிற்றில் பிறக்கிறது ... செல்வந்தன் வீட்டில் ... பசி கண்ணில் பிறக்கிறது ...! ஏழையின் வீட்டில் ... வயிறு அடுப்பாக எரியும் ... செல்வந்தன் வீட்டில் ... அலங்காரமாய் அடுப்பு எரியும்....! ஏழையின் வீட்டில் ... பசி நோய்க்கு காரணி .. செல்வந்தன் வீட்டில் ... நோய்நீக்கும் காரணி பசி ...! ^^^ கவிப்புயல் இனியவன் வறுமையின் கொடுமை

கவிப்புயலின் பலரசக்கவிதைகள் 01

கவிப்புயலின் பலரசக்கவிதைகள் --------------- நகைச்சுவை --------------- ஆறடி பனை போல் வளர்ந்திருக்கும் பெண்ணே யாரடி சொன்னது ஓரடி குட்டை பாவாடை போடச்சொல்லி .....? குதிக்கால் செருப்பணிந்து குதிரைபோல்போனவளே குதி இருக்குது உன் கால் எங்கே ...? கை பைக்குள் காசை தவிர கண்டதையும்வைதிருந்தவளே கை இருக்குது உன்கைப்பை எங்கே ...? கண்டதையும் ........ பூசி அழகு காட்டியவளே.... பூசுவதற்கு வர்ணங்கள் இருக்கு ... முகம் இருக்குது உன் அழகு எங்கே ..? ^^^ கவிப்புயல் இனியவன் கானா நகைச்சுவை கவிதை 

நான்குவரி கவிதை

தலைப்பு "அல்லியின் காதல் " --------------------------------- நான்குவரி கவிதை --------------------------------- நிலவொளியால் பருவமடையவைத்தவனே..... காதல் தடாகத்தில் காத்திருக்கவைத்தவனே.... மழைத்துளியாய் என்மேனியை வருடுகிறவனே அல்லி நான் உன்னை அள்ளத்துடிக்கிறேன்........ ^^^ கவிப்புயல் இனியவன்

வறண்டிருக்கும் மண்ணுக்கும்

தலைப்பு "மழைத்துளி " --------------------------------- தள்ளுவண்டிக்காருக்கும் நடைபாதை வியாபாரிகளுக்கு மழைத்துளி  ஒரு விஷத்துளி...! வறண்டிருக்கும் மண்ணுக்கும் குடத்தோடு நிற்கும் பெண்ணுக்கும் மழைத்துளி ஒரு அமிர்ததுளி....! கைகோர்த்து செல்லும் காதலருக்கும் பள்ளிவிட்டுவரும் பிள்ளைகளுக்கும் மழைத்துளி ஒரு இன்பத்துளி.....! ^^^ கவிப்புயல் இனியவன் 22.04.2017 அன்புடன் நிர்வாகி மற்றும் பொறுப்பாளர்கள் நிலாமுற்றம் குழுமம்

விருந்து

விருந்து நான்கு வரிகவிதை ----------------- விருந்து உறவுகலுக்கு கொண்டாட்டம் வீட்டிலுள்ள சேவலுக்கு திண்டாட்டம் உள்ளவனுக்கு செய்தால்  நஞ்சு இல்லாதவனுக்கு செய்தால் தொண்டு ^^^ கவிப்புயல் இனியவன் 21.04.2017 to 22.04.2017

சாதனையா ?

ஊ ..ல ..ழ ..ள .. நட்சத்திரக் கவிதைகள் இரவுக் கவிதைப் போட்டி 21-04௨017 ******************************************** சோதனையா ? சாதனையா ? ******************************************** முயற்சியின்பாதைகள் சோதனை.... சோதனையின்முடிவுகள் சாதனை... சோதனையை தலைக்கெடுக்காதே...... சாதனையை தலைக்கனமாக்காதே......! புரிதலில்லையேல் சோதனை...... புரிதலிருந்தால் சாதனை......... சோதனைகளும் நிலைப்பதில்லை...... சாதனைகளும் நிலைப்பதில்லை......! ^^^ கவிப்புயல் இனியவன் யாழ்ப்பணம்

கேள்விக்குறியில்லாத

கேள்விக்குறியில்லாத வினாத்தாள் ---------------------------------------- புதுக்கவிதைப் போட்டி 21.04.2017 - 22.04.2017 ------------------------------- பிறப்பிலிருந்து இறப்புவரை..... வாழ்க்கையொரு ............................. கேள்விக்குறியில்லாத வினாத்தாள் இங்கே கேள்விகள்..... ஆயிரமாயிரம் .......... கேள்விக்குறியில்லாததால்........ விடைகள் சந்தேகமாகிறது......! பள்ளிப்பருவத்தில் ஏன் படிக்கின்றாயென்று கேட்டார் தாத்தா....... சந்தோசமாய் வாழ்வதற்கென்றேன்....... படிக்காதவர்கள்  சந்தோசமாய்..... வாழ்வில்லையா....... ஆலயத்துக்கு ஏன் போகிறாய்...... என்று கேட்டார் தாத்தா........ இறைவனிடம் கல்வியை கேட்கப்போகிறேன் அப்போ பாடசாலை  கல்வியைத்.... தரவில்லையா ............... துன்பத்தால் துவண்டு விழுந்தேன்..... இன்பத்துக்காய் இறைவனை....... மன்றாடினேன்......... தோளில் தாட்டிக்கேட்டார் தாத்தா... துன்பத்தை இறைவன் தருவதில்லையா.... கேள்விக்குறியில்லாத வினாத்தாள் ...... முற்றுப்புள்ளியில்லாத விடைகள்...........! ^^^ கவிப்புயல் இனியவன் இலங்கை -யாழ்ப்பாணம் கவி அகரம்இலக்கியவட்டம்

அதிசயக்குழந்தை 15

அதிசயக்குழந்தை - அன்பு ------------------- அளவுக்கு மிஞ்சினால்..... அமிர்தமும் நஞ்சு......... அன்புக்கும் பொருந்தும்.....! என்னடா உளருகிறாய்.....? என்று கேட்டேன் அவனிடம்.... ஆசான் எனும் தோறணையில்...... ஆமாம் ஆசானே எதுவும்..... அளவோடு இருக்கனும்..... இல்லையேல் அதுவே நஞ்சு.........! பணத்தின் மீது அதிக அன்பு...... உடலை கெடுக்கும் உளத்தை...... மாசுபடுத்தும் அது நஞ்சுதானே........ பிள்ளைகள் மீது அதிக பாசம்..... எதிர்பார்பை கூட்டும்...... நிறைவேறாதபோது குடும்ப..... சண்டையாக மாறுகிறது........! துணைமீது அதிக காதல்...... கோழையாக்கிவிடுகிறது...... சுயசிந்தனையை இழக்க வைக்கிறது...... தன்மானத்தை இழக்கவைக்கிறது....... தனிமையாகினால் முதுமையை..... துயரமடைய வைக்கிறது.................! சமூக அக்கறை அதிகமானால்........ அதிக பதவி ஆசை வருகிறது...... பதவி வரும் போது எல்லவற்றையும்.... கண் மறைக்கிறது........! அப்போ எதையும் விரும்ப கூடாது என்கிறாயா.......? இல்லை இல்லை ஆசானே....... எல்லவற்றையும் விரும்புங்கள்..... எல்லாம் உங்களால் தான் ...... நடைபெறுகிறது என்பதை மட்டும்.... மறந்துவிடுங்கள்.........! ^^^^^^^^^ அதி

அதிசயக்குழந்தை 14

அதிசயக்குழந்தை - அநாதை  ----- அதிசயக்குழந்தையிடம் .... உன் அப்பா பெயர் என்ன ...? உன் அம்மா பெயர் என்ன ...? உனக்கு உடன் பிறப்புக்கள் ... எத்தனை பேர் .....? எனக்கு யாருமே இல்லையே ... என்றான் ....!!! அப்போ நீ அநாதையா...? என்று கேட்டேன்.... யாருமே இல்லை என்றுதானே ... சொன்னேன் அநாதை ... என்று சொன்னேனா என்றான் ...!!! என்ன உளறுகிறாய் ....? சொல்ல தொடங்கினான் அவன்  கருத்தை .....................!!!!!!!!!!!! உங்கள் .... அம்மா அப்பா இப்போ .... இருகிறார்களா ....? இல்லையே ....!!! அப்போ நீங்கள் ... அநாதையா ....?  இல்லையே ....!!! உங்கள் பெற்றோர் இறந்தவுடன் ... உங்களுக்கென ஒரு குடும்பத்தை ... அமைத்து மனைவி குழந்தை.... மாமனார் மாமியார் என்று ஒரு ... உறவை வளர்த்தீர்களே...... உங்களை யாரும் அநாதை .. என்று அழைத்தார்களா ....? உங்களின் தவறு என்ன தெரியுமா ...? நீங்கள் பிறரை காப்பாற்றுவதாக .... நினைப்பதும் நீங்கள் இல்லையென்றால் ... அவர்கள் அனாதையாகிவிடுவர் .... என்ற உங்கள் தப்பான எண்ணமே ....!!! நான்  ஒரு அநாதை எனக்கு உதவுங்கள் .... என்று சொல்பவர்கள் அநாதை ... என்ற சொல்லை தம் ஆயுதமாய் .... எடுத்து தம்மீது எல்லோ

அதிசயக்குழந்தை 13

அதிசயக்குழந்தை - இறக்கம்  ------- அதிசயக்குழந்தை ..... ஏணியில் ஏறுவதும் .... இறங்குவதுமாய் விளையாடிக் ... கொண்டிருந்தான் ....!!! அந்தவழியால் வந்த நான் .... என்னடா செய்கிறாய் என்று .... கேட்டேன் .....!!! ஏறுவதும் இறங்குவதுமாய் .... இருக்கிறேன் தெரியவில்லையா ...? என்றான் ....? உனக்கு  ஏற்றம் பிடிக்குமா .....? இறக்கம் பிடிக்குமா ....? எனக்கு இறக்கம் தான் ... பிடிக்கும் ஆசானே .... ஏன்டா உனக்கு எப்போதும் .... எதிர் மறையாகதான் பிடிக்குமா ...? இல்லை  ஆசானே எதிர் மறையின் ... நன்மையை உணரமாட்டேன் .. என்கிறீர்களே ....!!! இறக்கமும் வீழ்ச்சியும் .... தோல்விகள் இல்லை .... வரலாற்றின் மறு பக்கங்கள் .....!!! மலை  ஏறுபவன் இறங்கினால்-தான் மலை ஏறியதின் சாதனை ... தெரியவரும் .....! பள்ளத்திலிருந்து நீர் வீழ்ந்தால்-தான் நீரின் மகிமை புரியும் ....! அப்பில் பழம் கீழே விழுந்ததால் ... நியூட்டன் புவியீர்ப்பை கண்டார் .... வானத்து நீர் கீழே விழுந்தால் தான் .... பூமி பசுமை அடைகிறது ....! இயக்கவிதி மேலே தொழிற்பட்டால் .... வெளிப்பாடு கீழேதான் இருக்கும் .....!!! இறக்கமும் வீழ்ச்சியும் ..... இழிவானவையல்ல எல்லா .... செய

அதிசயக்குழந்தை 12

அதிசயக்குழந்தை - ஆசை  ---------- உன்  ஆசை என்ன என்று கேட்டேன் ... அதிசயக்குழந்தையிடம்.....? ஆசையில்லாமல் இருக்கவே ... ஆசை என்றான் ஒரே வரியில் ....!!! என்னப்பா சொல்கிறாய் ....? ஆமா ஆசானே .....!!! ஆசையே அனைத்து துன்பத்துக்கும் .... மூல காரணி ......!!! நிறைவேறாத ஆசையின் வெளிப்பாடே .... கோபம் ,,,,,,,,,,,,!!! கோபத்தின் வெளிப்பாடே .... கொடூரம் ...........!!! கோபத்தை குறையுங்கள் ..... என்பது தவறு - ஆசையை .... குறையுங்கள் என்பதே சரியானது .....!!! பெண் ஆசை .... நடத்தையை கெடுக்கும் ...... மண் ஆசை ..... நாட்டை கெடுக்கும் ...... பொன் ஆசை ...... பெண்ணையே கெடுக்கும் .......!!! ஆசையை குறைப்பது எளிதல்ல .... ஆசையை வரிசைப்படுத்துங்கள் .... அந்த வரிசையில் இயலுமையை .... பாருங்கள் நிறைவேறக்கூடிய .... அவசியமான ஆசைக்கு ஆசைப்படுங்கள் .....!!! ^ அதிசயக்குழந்தை  வசனக்கவிதை  கவிப்புயல் இனியவன் தொடர் - 12

அதிசயக்குழந்தை 11

அதிசயக்குழந்தை - முதுமை  ---------- பக்கத்து வீட்டில் தாத்தா .... பேரனை திட்டியபடி இருந்தார் .... தனது அனுபவத்தையெல்லாம் .... அறிவுரையாக கொட்டி கொண்டிருந்தார் ..... பேரனோ காதில் விழுத்தாமல் .... எங்கேயோ பார்த்துகொண்டிருந்தான் ... கோபமடைந்த தாத்தா அடிக்க கை .... ஓங்கினார்.................................................  அப்போது அதிசய குழந்தை ....!!! தாத்தா  நிறுத்துங்க... நிறுத்துங்க .... உங்களுக்கு அறிவுரை செய்ய ... நான் பெரும் அறிவானவன் இல்லை ... என்றாலும் கூறதொடங்கினான்.....!!! முதுமையில் எல்லோரும் -தம் .... அனுபவத்தை அறிவாக நினைத்து .... அறிவுரை சொல்கிறார்கள் -தப்பு ... அனுபவம் வேறு அறிவு வேறு .....! உங்களது அனுபவம் மற்றவனுக்கு .... தேவைப்படாது ,பொருத்தமற்றது .... முதுமையில் அதை நீங்கள் பிறர் .... மீது திணிக்கிறீர்கள் தப்பு தாத்தா ...!!! வயது கூடியவர்கள் அறிவாளிகள் .... வயது குறைந்தவர்கள் அறிவற்றவர்கள் .... நாங்களே அனுபவசாலிகள் ... உங்களுக்கு அனுபவம் போதாது .... என்றெல்லாம் முதியோர் நினைப்பது .... தப்பு தாத்தா தப்பு .....!!! முதுமையின் ஒத்தகருத்து பொறுமை ..... தேவையற்றவற்றில் தலைய

அதிசயக்குழந்தை 10

அதிசயக்குழந்தை -வறுமை  ******* வீதியில்  நின்ற வறிய வயோதிபர்.... வீதியில் வந்த பணக்காரனை ....  உதவி கேட்டார் - அவர் பணம் .... கொடுக்கவில்லை - கோபமடைந்த ... வயோதிபர் வாய்க்கு வந்தபடி .... திட்டினார் ....!!! இதை  அவதானித்த அதிசய குழந்தை ..... வயோதிபரிடம் என்ன தாத்தா ... என்று ஆரம்பித்ததும் .... அவர் மேலும் திட்டினார் .........!!! பணம்  படைத்தவர்கள் தீயவர்கள் ..... கயவர்கள் கள்வர் இரக்கம்... அற்றவர்கள் நயவஞ்சகர்கள் .... திட்டிக்கொண்டே போனார் .... நிலை குலைந்த தாத்தாவுடன் .... பேசி பயனில்லை என்றறிந்த .... அதிசயக்குழந்தை விலகியது .....!!! என்ன குழந்தாய் அதிகம் ... ஜோசிக்கிறாய் என்று கேட்டேன்....? ஆசானே ..... வறுமை என்பது ஒரு நோய் ..... நோய்க்கு நாம் மருந்தெடுத்து .... மாற்றுகிறோமோ அதுபோல் ... வறுமையையும் நாம் மாற்றலாம் .... வறுமையோடு வாழ்பவன் நோயோடு .... இறந்து விடக்கூடாது என்கிறேன் ....!!! வறுமைக்கு காரணம் பணம் .... படைத்தவர்கள் மோசமானவர்கள் ... என்ற மன விரக்தியும் தாமும் .... பணம் படித்தால் அவ்வாறே மாறி .... விடுவோம் என்ற மனப்பயமுமே .... ஒருவன் மீது வறுமை தொடரகாரணம் .... வறுமையை நீக்கணும