காதலால் காதல் செய்கிறேன் உயிரே ....!!! (02)

உனக்காக 
எதையும் தாங்குவேன் 
நான் சுயநலவாதி இல்லை 
உன் இன்பத்தில் மட்டும் 
பங்குகொள்ள ......!!!

நீ காதலில் ஒரு நாணயம் 
இரண்டு பக்கமும் விழுகிறாய் 
நீ எந்த பக்கம் விழுவாய் என்ற 
ஏக்கத்துடன் வாழ்கிறேன் 
அதிலும் சுகமுண்டு ....!!!

--------------
உன்னுடன் பேச வேண்டும்
உன்னுடன் மட்டும் பேச வேண்டும்
உள்ளத்தில் இருப்பதை எல்லாம்
உள்ளதை உள்ளபடி பேசவேண்டும்
உண்மையுடன் பேசவேண்டும் ...!!!

என்ன பேசப்போகிறாய் ..?
என்கிறாயா ..? எப்போது ..?
என்னை பற்றி பேசியிருக்கிறேன் ..?
எல்லாம் உன்னை பற்றி தானே
எப்போதும் பேசுவேன்
என் உயிர் நீ தானே உயிரே ...!!!

---------------
படையில் எல்லாம் இழந்து ...
நிற்கும் வீரனைப்போல்... 
உன்னிடம் எல்லாவற்றையும் ...
வழங்கி இப்போ ஒன்றும் 
இல்லாமல் நிற்கிறேன் ...!!!

என்று இழக்கமாட்டேன் 
நீ தந்த நினைவுகள் 
நான் கொண்ட உண்மை காதல் 
உனக்காக எழுதிய கவிதை 
நீ தந்த நினைவு பரிசு ...!!!

-------------

எத்தனை எத்தனை பெண்கள்
என் முன்னால் சென்று
விட்டார்கள் - உன் வரவை
எதிர் பார்த்த கண்கள்
சோர்கிறது ...!!!

எனக்கு இரண்டு இதயம்
வேண்டும் -ஒன்று உன்னை
நினைத்து வாழுவதற்கு
மற்றையது
என்னை மறப்பதற்கு ...!!!

---------------
பகலில் நீ எத்தனை வலியை
தந்தாலும் இரவில் சுகம் ...!!!
கனவுகள் கனிவாக இருக்கின்றன
நான் இரவுக்காதலன் ....!!!

இறைவா ...
இரவை விடிய விடாதே
கனவில் காதலால் காதல்
செய்கிறேன் பகலின் காயங்கள்
இரவில் தான் ஆறுதல்
அடைகிறது .....!!!

-----------
என்னை .....
பத்திர படுத்தியதை 
காட்டிலும் உன்னை பத்திர 
படுத்துகிறேன் கவனமாக 
நீ இருக்கும் இடம் -என் 
இதயம் என்பதால் ....!!!

இதயங்கள் இணைவது 
காதல் - உயிராய் இணைவது 
திருமணம் நாம் இரண்டாகவும் 
இணைந்து விட்டோம் உயிரே ...!!!

---------
எத்தனை
முறை எழுதினாலும்
என்ன எழுதினாலும்
அலுக்காமல் இருப்பது
உன்னை பற்றிய கவிதை ...!!!

உன்னை நினைக்க முதலே
கவிதை தானாக வருகிறது
காதல் நாம் வணங்கும் கடவுள்
கவிதை நான் உனக்கு செய்யும்
அர்ச்சனை ....!!!

கருத்துகள்

பிரபலம் பெற்ற கவிதை

ஹைக்கூ , சென்ரியு , லிமரைக்கூ வடிவம்

தேர் திருவிழா

உயிர் மூன்றெழுத்து கவிதை மூன்று வரி