காதலால் காதல் செய்கிறேன் உயிரே ....!!! (03)

உன்னிடம் நான் திருடிய ..
இதயத்தை நான் இதயத்தில்
பத்திரமாக வைத்திருக்கிறேன்
என்னிடம் நீ திருடிய இதயம்
எங்கே உயிரே ...?


என் இதயத்தை நீ
பத்திரமாக வைத்திருக்க
மறந்துவிட்டாய் போலும்
என் இதயத்துக்குள் இருக்கும்
உன் இதயம் அழுகிறதே ....!!!


@}-
@@@

நீ கிறுக்கி தந்த
சின்ன சின்ன கிறுக்கல்களை
முதல் தர கவிதையாக
சேர்த்து வைத்திருக்கிறேன் ....!!!

உனக்காக
உனக்காகமட்டும்
எழுதிய கவிதைகள்
எங்கே அன்பே ....?
வீட்டு குப்பை தொட்டியில்
கிடக்கிறதே ...!!!



@}-
@@@

தமிழில்
காலங்கள் மூன்று
இறந்த, நிகழ்,எதிர் காலம் ...
எனக்கு எல்லாம் ஒரே
காலம் தான் ....!!!


உன்னை நினைத்து
கொண்டிருந்தேன்
நினைக்கிறேன்
நினைப்பேன் எனக்கு....
உன்னை நினைக்கும் காலம்
மட்டுமே ஒரே காலம் ...!!!



@}-
@@@

கண் சிமிட்டும் நொடி
பொழுதிலும் உன்னை
கண்ணால் காதலிக்கிறேன்
நித்திரையை தொலைத்து
விட்டேன் .....!!!


நீ நன்றாக தூங்கு
நீ நினைக்காமல் விட்டாலும்
நான் உன்னை நினைக்கிறன்
கனவில் வருவேன் நிச்சயம் ...!!!

@}-
@@@

சிறு வயதில் காசை
தொலைத்தேன் ...
நடுவயதில் உறவை
தொலைத்தேன் ....
கட்டிளமை வயதில்
என்னை தொலைத்தேன் ....!!!



நானும் ஒரு அநாதை
என்னிடம் ஒன்றும் இல்லை
இதுவரை இருந்த நீயும்
இல்லையே
காதல் மட்டும் வாடவில்லை ..!!!

கருத்துகள்

பிரபலம் பெற்ற கவிதை

ஹைக்கூ , சென்ரியு , லிமரைக்கூ வடிவம்

தேர் திருவிழா

உயிர் மூன்றெழுத்து கவிதை மூன்று வரி