காதலால் காதல் செய்கிறேன் உயிரே ....!!!


நீ
நிலாவாக இரு ....!!!
நிழலாக இரு ....!!!
எதுவாக இருந்தாலும் ..
காதல் செய்கிறேன் ....!!!
நிலவாக இருந்தால்
நினைவுகளால் காதலிப்பேன் ...!!!
நிழலாக இருந்தால்
கனவுகளால் காதலிப்பேன்.....!!!
உன்
தீ கொண்ட பார்வையால்
கருகி கொண்டிருக்கிறேன்
உன் மழலை கொண்ட பேச்சால்
துடித்து கொண்டிருக்கிறேன்
தினமும் எரிகிறேன் - உன்
கண் பட்ட காதல் தீயால் ...!!!
இந்த புண்பட்ட இதயத்துக்கு
நீ சிரஞ்சீவி மருந்து ....!!!
உன்னை
சிற்பமாக செதுக்கினேன்
நீ சிற்பமாக இருகிறாய்
நான் தான் சிதைக்கபட்டு
விட்டேன் ....!!!
எண்ண உளியால் செதுக்கிற
உன் உருவம் அழகானது
உளிதான் அழுகிறது ...!!!
உலகில்
பெரிய களஞ்சிய சாலை
என் இதயம் தான் -உன்
இத்தனை நினைவுகளை
சேகரித்து வைத்து அப்பப்போ
தந்து கொண்டிருக்கிறது ...!!!
களஞ்சிய இருப்பு குறையாமல்
உன் நினைவுகளை தா உயிரே ...!!!
என் கவிதையை எடுத்து
காதல் செய்பவர்கள்
புரிந்த கொண்ட அன்பை
கூட - நீ ஏன் அன்பே
புரிந்து கொள்ளவில்லை ..?
ஒன்றில் என்னை புரிந்துகொள்
இல்லையேல் கவிதையை
புரிந்து கொள் ....!!!
எனக்குள் நீயும்
உனக்குள் நானும்
இருக்கிறோம் என்பதை
எத்தனை முறைதான்
தான் உனக்கு சொல்வது ...?
உருவம் தான் இரண்டு
உயிர் ஒன்று என்பது
தானே காதல் .....!!!
 
என்னை எல்லோருக்கும்
பிடிக்கும் -ஆனால் எனக்கு
உன்னை மட்டுமே பிடிக்கும் ...!!!
உன்னை எல்லோருக்கும்
பிடிக்கும் -ஆனால் உனக்கு
என்னை மட்டுமே பிடிக்கும் ...!!!
காதல் ஆயிரம் சங்குகளில்
ஒரு சங்கு வலம்புரிபோல் ...!!!
 
நீ வந்து விட்டு
சென்றுவிடுவாய்
உனக்கு எங்கு தெரியும்
நான் படும் அவஸ்தை
உன் நினைவுகள் தான்
உள்மூச்சு - உன் கனவுகள்
தான் என் வெளி மூச்சு ....!!!
 
எதை எடுத்தாலும் தோல்வி
எதை தொட்டாலும் பிரச்சனை
என்றிருந்த என் வாழ்க்கையில்
நீ வந்தாய் -நினைவுகளை தந்தாய்
பாலைவனமாக இருந்த என்
வாழ்க்கை - நயாக்கர நீர்
வீழ்ச்சியாக்கியவள் -நீ
 
நீ தரும் நினைவுகள்
சிலவேளை காயமாய்
இருகிறது - சிலவேளை
மருந்தாக இருக்கிறது ...!!!
அதனால் தான் இத்தனை
வலியை நீ தந்தாலும்
சிரித்துவிட்டு இருக்கிறேன் ...!!!
 
வாழ்க்கையில் நான்
பெற்றவற்றை விட
இழந்தவை அதிகம்
உன் கன்ன குழி சிரிப்பில்
என்னை இழந்தேன்
இப்போ உன்னை இழந்து
விட கூடாது என்பதற்காக
எல்லாவற்றையும் இழக்கிறேன்
 
நாளாந்தம் நான் படும்
வேதனைகள் சொல்லில் அடங்காது
எந்நாளும் அதை உனக்கு நான்
கூறுவதே இல்லை ....!!!
உன்னோடு இருக்கும் அந்த
நிமிடமே என் இன்ப நிமிடம்
இதயமானவளே ...!!!
 
நீ என்ன மின்னலா ..?
வரும் போது இத்தனை
பிரகாசமாக இருக்கிறாய் ..?
நீ என்ன மழைக்கு
பிறந்தவளா ..? இத்தனை
கண்ணீரை தருகிறாய் ,,,,?
நீ மின்னலாக இரு
மழையாக இரு -நான்
உனக்கு மேகமாக இருப்பேன் ...!!!
 
காதலில்
சேர்ந்திருக்கும் போது
வரும் இன்பத்தை தான் அன்பே
எல்லோரும் விரும்புவர் -நீ
பிரிந்திருக்க விரும்புகிறாய் ...?
பிரிந்திருக்கும் போது நினைவுகள்
அதிகம் என்பதற்காகவா ...?
 
இதயம்
ஒரு கையளவு
என்று சொன்னார்கள்
உன்
இதயத்தில் இணைந்தேன்
இன்று வரை அதன்
எல்லையை தேடுகிறேன்
இப்படிதான் வாழ்க்கையை
தொலைத்தவர்கள் அதிகம்
நான் மட்டும்
விதிவிலக்கில்லை ...!!!
 
சந்தோசப்படுகிறேன் உயிரே
இதுவரை காதலை சுமந்தேன்
இப்போ நீ தந்து விட்டு சென்ற
வலிகளை சுமர்ந்து கொண்டு
இருக்கிறேன் ....!!!
உன் வலிகளை சுமக்கும்
கூலியாளாய் என்னை
காதலித்தத்தற்கு நன்றி ...!!!
 
உன் இதயம் என்ன காதல்
சிறைச்சாலையா ...?
என்னை கைது செய்து
விலங்கிட்டுருக்கிறாய் ....
ஒன்றில் ஆயுள் கைதியாக்கு ...
தூக்கு தண்டனை கைதியாக்கு ...
தீர்ப்பை தள்ளிப்போடுவதுபோல்
மௌனத்தில் இருக்காதே ...!!!
 
நான்
காதல் பிச்சைகாரன்
என்னிடம் இருந்த
எல்லாவற்றையும் இழந்து
உன்னை பெற்றேன் ....!!!
இப்போ உன்னையும் இழந்து
நிற்கிறேன் ...!!!
கிழிந்த சட்டைபோல் சில
நினைவுகள்
ஒட்டி நிற்கின்றன ...!!!
 
இறைவா ..?
இரண்டு கண்னை கொடுத்து ...
என்னை கலங்க வைத்தவனே...!!!
எனக்கு இரண்டு இதயம் கொடு ...
அவள் நினைவுகளை சுமக்க ..
ஒரு இதயம் போதவில்லை ...!!!
 
காதலில் பொறுமையை ..
கடைப்பித்தது தப்பானது....
நீ கிடைப்பாய் என்று இருந்து...
என் வாழ்க்கையே ....
கானல் நீராகி விட்டது ....
என் கல்லறைப்பூவில் ...
உன் நினைவுகள் தான் ...
ஆத்ம வரிகள் .....!!!

   
-

கருத்துகள்

பிரபலம் பெற்ற கவிதை

ஹைக்கூ , சென்ரியு , லிமரைக்கூ வடிவம்

தேர் திருவிழா

உயிர் மூன்றெழுத்து கவிதை மூன்று வரி